மேடையில் நயினார் நாகேந்திரனிடம் பிரதமர் மோடி சொன்னது என்ன?
மேடையில் நயினார் நாகேந்திரனிடம் பிரதமர் மோடி சொன்னது என்ன?
#bjp #electioncampaign #thanthitv
நெல்லை மாவட்டம், அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அம்பாசமுத்திரம் வருகை தந்த அவர், காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை வந்தடைந்தார். மேடையில் நயினார் நாகேந்திரன் பேசுவதற்காக அழைக்கப்பட்டாபோது, அவரை பிரதமர் நிறுத்தி ஒருசில நிமிடம் பேசினார். கூட்டம் முடிந்த பிறகு இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டெல்லிக்கு வாருங்கள் என்று மோடி கூறியதாகத் தெரிவித்தார்.
Next Story