`1' சீட் கூடஒதுக்காத மம்தா..! - காங்.,ல் இருந்து ஒலித்த குரல்... சலசலப்பில் I.N.D.I.A.

x

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராஜ் ரமேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு வங்கத்தில் திரிணாமு காங்கிரஸ் கட்சியுடன் கவுரவமான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை விரும்புவதாக காங்கிரஸ் பலமுறை கூறி வருகிறது என்று கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு என்பது பேச்சுவார்த்தை மூலம் நடைபெறவேண்டுமே தவிர அறிவிப்புகளால் இருக்க கூடாது என்றும், பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இந்தியா கூட்டணி எப்போதும் விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்