அண்ணாமலை சொன்ன வார்த்தை... கரகோஷத்தால் அதிர்ந்த மேடை

x

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் 2 நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரைக்குப் பிறகு, கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில், பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்