தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு - ராமநாதபுரம் அருகே பரபரப்பு

x

தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

ராமநாதபுரம் அருகே பரபரப்பு

#ramanathapuram #voting #tamilnadu #thanthitv

ராமநாதபுரம் அருகே விவசாய நிலங்களுக்கு அருகில் அமைய இருக்கும் உப்பளங்களை மூடக்கோரி, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

திருப்புலானிக்கு அருகில் உள்ள ஆணைகுடி கிராமத்தில், கண்மாய் அருகே 150 ஏக்கரில், தனியார் நிறுவனம் உப்பளம் அமைக்க உள்ளது. அந்த உப்பளத்தை நிரந்தரமாக மூடக்கோரி, வரும் 19-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்