மறைந்த எம்பி கணேசமூர்த்தி வீட்டிற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்த வைகோ

x

#Vaiko | #Erode

மறைந்த எம்பி கணேசமூர்த்தி வீட்டிற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்த வைகோ

மறைந்த ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்த்தூவி மரியாதை செய்தார். மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி, கடந்த மாதம் 24-ம் தேதி தற்கொலைக்கு முயன்ற நிலையில், 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஈரோடு வந்தார். அப்போது, கணேசமூர்த்தியின் வீட்டிற்கு சென்ற வைகோ, அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்