"சிலிண்டர் ரூ.500க்கு விற்கப்படும்" - துரை வைகோ உறுதி | trichy

x

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி மாநகரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூனி பஜார், மேலப்புதூர், கோரிமேடு, பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் இணைந்து மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது தப்பாட்டம், மயிலாட்டத்துடன் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசாரத்தின்போது பேசிய துரை வைகோ, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறையும் எனக் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்