தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ் - தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக மேலும் ஒரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பயணிக்கும் இந்த ரயில், ஏப்ரல் 20-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 அன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது. இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


Next Story

மேலும் செய்திகள்