"அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்" - வார்னிங் கொடுத்த எடப்பாடி

x

#thanthitv #electioncampaign #loksabhaelections2024 #admk #edappadipalanisamy

"அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்" - வார்னிங் கொடுத்த எடப்பாடி

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை பற்றி யார் பேசினாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் எனவும், அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் இன்று எந்த நிலையில் உள்ளனர் என்பதை உணர வேண்டுமெனவும் கூறினார். மேலும், அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளதாக நினைவு கூர்ந்த அவர், அவர்கள் இருவரும் மக்கள் மனதில் வாழ்வதாக கூறினார். மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அதிமுக தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்