ஈபிஎஸ் காரை நடுவழியில் நிறுத்தி சோதனை... எல்லையை தொட்ட உடன் பறந்து வந்த பறக்கும் படையினர்

x

#nilgiris | #loksabhaelection2024 | #edappadipalanisamy

ஈபிஎஸ் காரை நடுவழியில் நிறுத்தி சோதனை... எல்லையை தொட்ட உடன் பறந்து வந்த பறக்கும் படையினர்

தேர்தல் பிரச்சாரத்திற்காக நீலகிரி வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு உதகைக்கு சென்றார். கோவை மாவட்ட எல்லையை தாண்டியவுடன் நீலகிரி எல்லையில் உள்ள பர்லியார் பகுதியில், வாகன சோதனை நடைபெற்றது. அங்கு வாகனங்கள் நிற்கவில்லை. இந்நிலையில், காட்டேரி பகுதியிலிருந்து வந்த பறக்கும் படை குழுவினர், எடப்பாடி பழனிசாமி கார் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதன்பின்னர் பிரச்சாரத்திற்காக உதகை சென்றடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்