கமல் பிரசாரத்தில் நடந்தது என்ன? தீயாய் பரவும் வீடியோ

x

ஈரோட்டில் கமலஹாசனின் பிரச்சார கூட்டத்திற்கு பணம் கொடுத்து மக்களை கூட்டி வந்த‌தாக பகிரப்படும் வீடியோக்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று ஈரோடு, கருங்கல்பாளையத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் திமுகவினரும் பணம் கொடுத்து பொதுமக்களை அழைத்து வந்த‌தாக வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கராவை குறிப்பிட்டு புகார் அளித்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா, அந்த வீடியோக்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்