அளப்பறையோடு பிரசாரத்தை தொடங்கிய ராயபுரம் மனோ - தீவிர வாக்கு சேகரிப்பு

x

குடும்ப ஆட்சிக்கும், மதவாத சக்திக்கும் முற்றுப்புள்ளி வைத்திட தனக்கு வாக்களிக்கும்படி வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ பிரசாரம் மேற்கொண்டார். ஆர்.கே.நகரில் முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கிய ராயபுரம் மனோ, மீனவ குடும்பங்கள், இஸ்லாமிய பிரதிநிதிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, இஸ்லாமியர்கள் வழங்கிய நோன்பு கஞ்சியை பருகி ராயபுரம் மனோ வாக்கு சேகரித்தார். அவருடன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்