"எனது சொந்த செலவில்.." மக்களுக்கு உறுதி கொடுத்த ஓபிஎஸ் | OPS

x

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருச்சுழி சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அரசகுளத்தில் வாக்கு சேகரித்தபோது, அந்த பகுதியில் அதிகம் விளையும் வெங்காயம், வெள்ளரியைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். முருகன்குளம் அரசு சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கித் தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காரியாபட்டியில் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், நவோதயா பள்ளி தொடங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்