"நல்ல நேரம் வரட்டும்" காத்திருந்த திமுக வேட்பாளர் - காக்கவைக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்

x

பொள்ளாச்சியில் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்து, நல்ல நேரம் வரட்டும் என்று காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தங்களையும் எப்படி காக்க வைக்கலாம் என தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்று கூறியதும், பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்