"பிரதமர் மோடியின் குஜராத்தில் மின்சாரம் பார்க்காத ஊர்கள்" - கதிர் ஆனந்த் கடும் விமர்சனம்

x

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் இன்னும் மின்சாரம் பார்க்காத ஊர்களும் உள்ளதாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்... வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அப்போது பேசிய அவர் பாஜக-அதிமுக கூட்டணி பிளவு குறித்து விமர்சித்ததுடன், இந்தப் பகுதிக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று தன் தந்தையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தான் வெற்றி பெற்றால் 100 கோடி ரூபாய் செலவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்துத் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்...


Next Story

மேலும் செய்திகள்