"வருத்தப்படும் பிரதமர் மோடி ஏன் இப்படி செய்யனும்?" - கனிமொழி கேள்வி

x

தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லை என வருத்தப்படும் பிரதமர் மோடி, ஏன் இந்தியை திணிக்கிறார்? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பட் ஆகியோரை ஆதரித்து குழித்துறை பகுதியில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தல் முடிந்த‌தும், பாஜகவுடன் அதிமுக சேர்ந்துகொள்ளும் என்றார். கச்சத்தீவு மீது பிரதமர் மோடிக்கு திடீரென அக்கறை வந்துள்ளதாக தெரிவித்த கனிமொழி, கச்சதீவை மீட்க 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்