"மக்களின் கோபம் பாஜகவுக்கு சாதகமாக மாறி உள்ளது" - பிரதமர் மோடி சொன்ன தகவல்

x

"மக்களின் கோபம் பாஜகவுக்கு சாதகமாக மாறி உள்ளது"

பிரதமர் மோடி சொன்ன தகவல்

#pmmodi #bjp #electioncampaign #loksabhaelections2024 #tvinterviews #thanthitv

திமுகவுக்கு எதிரான மக்களின் கோபம் பாஜகவுக்கு சாதகமாக மாறி உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில், சனாதன தர்மத்தை மிகவும் இழிவுபடுத்தும் திமுகவுடன் காங்கிரஸ் ஏன் கைகோர்த்துள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார். சனாதன தர்ம விவகாரத்தில் திமுகவுக்கு எதிரான மக்களின் கோபம், பாஜகவுக்கு சாதகமாக மாறி இருப்பதாக அவர் தெரிவித்தார். ராமர் கோவில் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு விட்டதால் இந்த பிரச்சனை அவர்களின் கையை விட்டு சென்று விட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்