"மக்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை" - பிரசாரத்தில் வருந்திய ஆற்றல் அசோக்குமார்

x

#thanthitv #electioncampaign #admk

"மக்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை" - பிரசாரத்தில் வருந்திய ஆற்றல் அசோக்குமார்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக காமராஜபுரம், பூளவாடி பிரிவு அரசமரம், டி எஸ் கார்னர் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது, தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இக்கூட்டத்தில் பேசிய அவர், விலைவாசி உயர்வால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்