"மோடி சுட்ட வடை... `மே மே'... ஆட்டு பிரியாணி... " - ரூ.15 லட்சத்துக்கு போர்ஜரி செக்..! ஆ.ராசா அதகளம்

x

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அண்ணாமலையை கேலி செய்வதாக ஆட்டுக்குட்டிக்கு மாலை அணிவித்தும், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கியும் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் எனக் கூறிய மோடியை கிண்டல் செய்யும் விதமாக 15 லட்சம் ரூபாய்க்கான போர்ஜரி காசோலையை தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரத்தில் போட்டோ காட்டும் கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடியை தாக்கி பேசும்போது போட்டோவை காட்டி பிரசாரம் செய்தார். இதேபோல, எடப்பாடி பழனிசாமியும் போட்டோ காட்டி பிரசாரம் செய்தது போல், அவர்களுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது போல, ஆ.ராசாவும் போட்டோவை கையில் காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டார்...


Next Story

மேலும் செய்திகள்