தூங்கி வழிந்து, மொபைல் நோண்டிய அலுவலர்கள்... நொந்த அதிகாரி... சிறப்பாய் ஒரு ஆலோசனை கூட்டம்

x

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில், அலுவலர்கள் தூங்கிக் கொண்டும், செல்போன் பார்த்துக் கொண்டும் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 11 மணிக்கு வந்த அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தபோது, தூங்கிக்கொண்டும் செல்போனை பார்த்துகொண்டும் இருந்தனர். இதுபோன்ற மெத்தனப் போக்கால், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அலுவலர்கள் திணறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்