கடவுள்களின் பெயரை சொல்லி மோடி - டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

x

கடவுள்களின் பெயரை சொல்லி மோடி

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

#primeminister #narendramodi #electioncampaign #delhihighcourt #thanthitv

பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் ஆனந்த் எஸ் ஜோந்தலே தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தேர்தல் பரப்புரையின்போது, ஹிந்து, சீக்கிய கடவுள்களின் பெயரைப் பயன்படுத்தி மோடி வாக்கு சேகரித்தாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதராவாக செயல்படுவதாக மோடி பேசியதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய மோடி மீது, தேர்தல் நடத்தை விதிகளின் நடவடிக்கை எடுக்க கோரியும், 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரியும், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்