பாஜக vs நா.த.க இடையே மோதல் ...! - தேர்தல் அலுவகத்தில் பரபரப்பு - படாத பாடுபட்ட போலீஸ்

x

கிருஷ்ணகிரியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த, நாம் தமிழர் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் நரசிம்மனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான வீரப்பன் மகள் வித்யாராணியும் தங்கள் ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், வெளியில் நின்று கொண்டிருந்த இரு கட்சியினரும், மாறி மாறி கோஷம் எழுப்பியதால், வாக்குவாதமாக மாறியது. இதையடுத்து, போலீசார் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்