"கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்" - கொளுத்தும் வெயிலில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம்

x

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், ஆலங்காயம் பேருந்து நிலையம் மற்றும் பூங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு, மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, கடந்த முறை வெற்றியைக் கொடுத்த வாணியம்பாடி தொகுதி மக்களை தன் வாழ்நாள் வரை மறக்க மாட்டேன் என்று கூறினார். திமுவுக்கு வாக்களித்தால், கல்விக் கடன் விவசாயக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களையும் ரத்து செய்கிறோம். கல்வி கடனை ரத்து செய்வோம்," என கதிர் ஆனந்த் பேசினார்.

பின்னர் தந்தி டிவிக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அளித்த பேட்டியில், திமுக அமோகமாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்