"மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் கமல் உறுதி" - தயாநிதிமாறன் பேட்டி

x

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 29ஆம் தேதி பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்க உள்ளதாகவும், வரும் 6, 7ஆம் தேதி சென்னை வர உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முதலமைச்சருக்கும், இந்தியா கூட்டணிக்கும் எதிரிகளே தென்படவில்லை என்றார்


Next Story

மேலும் செய்திகள்