`இந்தியா' மீண்டும் வாயை விட்ட ஆ.ராசா..! பாயிண்டை பிடித்த பாஜக... வடக்கில் காங்.,க்கு சிக்கல்

x

இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ.ராசாவின் கூற்றை, காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா? என்று, பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது, இந்திய கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களின் அரசியல் கொள்கையா? என கேள்வி எழுப்பினார். பாரத் மாதா கீ ஜெய், என்பதை ஏற்க மாட்டோம் என்ற திமுக எம்பி ஆ.ராசா வெளிப்படையாகவே தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார். ஆ.ராசாவின் இந்த கூற்றை சோனியா காந்தி ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே போன்றோர் ஏற்றுக் கொள்கிறார்களா என கேள்வியெழுப்பினார். வெற்று விளம்பரத்திற்காகவே காங்கிரஸ் கட்சியினர் கோவிலுக்கு செல்வதாக குற்றம் சாட்டிய ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் அவர்கள் அவமதிப்பதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்