வீரப்பன் சமாதியில் வேட்புமனுவை வைத்து மகள் எடுத்த வீர சபதம்

x

கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வித்யாராணி, தனது தந்தை வீரப்பன் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து உறுதிமொழி ஏற்றார். சேலம் மாவட்டம் மூலக்காட்டில் உள்ள தந்தை நினைவிடத்திற்கு வந்த அவர், வேட்பு மனுவை வைத்து வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராணி, மக்களவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்