ஒரு பக்கம் ஆரத்தி, ஒரு பக்கம் பொன்னாடை..அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் happy canvassing

x

ஈரோடு அருகே, பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் வாக்குசேகரித்த ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதனை ஒட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் இணைந்து பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட நெட்ட வேலம்பாளையம் சின்ன ஆனங்கூர், ஆனங்கூர், தண்ணீர் பந்தல் பாளையம், மோடமங்கலம், வால்ராஜ்பாளையம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்