டீ கடைக்கு சென்று டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பு - பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம்..

x

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம், கொல்லைக்காடு கடைத்தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள டீ கடைக்கு சென்று, டீ போட்டுக் கொடுத்து, வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தெருத்தெருவாக பிரச்சாரம் செய்த கருப்பு முருகானந்தம், எம்.பி.யாக வெற்றி பெற வைத்தால், கொல்லைக்காடு, இடையாத்தி உள்ளிட்ட கிராமங்களை மீண்டும் பட்டுக்கோட்டை தாலுகாவில் இணைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், கொல்லைக்காடு கிராம‌த்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அமைத்துத் தருவேன் என்றும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்