தமிழகத்தில் சத்தமின்றி நடந்த நிகழ்வு...அரசியல் கட்சியினர் முன்னிலையில் இரவோடு இரவாக அனுப்பி வைப்பு

x

தமிழத்தில் மக்களவைத் தேர்தலுக்கு பதிவான வாக்குகள், வாக்குச்சாவடி மையங்களில் சீலிடப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நிறைவு பெற்றது. பல இடங்களில், 7 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்குகளை செலுத்திய பின்னர், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை, அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் முன்னிலையில் அதிகாரிகள் முறையாக சீலிட்டனர். பின்னர், சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில், துணை ராணுவப் படையினரும், 2வது அடுக்கில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையினரும், 3வது அடுக்கில் தமிழ்நாடு காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்