"குக்கருக்கு ஓட்டு போட்டால்.." திருச்சி மக்களுக்கு அமமுக செந்தில்நாதன் கொடுத்த உறுதி

x

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததும், திருச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெற்றுத் தருவேன் என அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் உறுதியளித்துள்ளார்.

திருச்சி மக்களவை தொகுதியில், அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர்,

மருதாண்டாகுறிச்சி, மல்லியம், முள்ளிக்கரும்பூர், எட்டரை புலியூர், போதாவூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வாக்குசேகரித்தார். அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், 400 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்றார். தேசியமும், தமிழகமும் ஒன்றிணைந்து, எவ்வித பிரிவினை வாதமும் இல்லாமல் 3 வது முறையாக மோடி பிரதமராவார் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்