பிரசாரத்தின் போது தங்கர்பச்சான் செய்த செயல் - நெகிழ்ந்து போன மூதாட்டி

x

கடலூர் பாமக வேட்பாளரும் இயக்குநருமான தங்கர்பச்சான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எருமனூர், பெரிய வடவாடி, விஜய மாநகரம், மாத்தூர், நடுக்குப்பம், பூவனூர், பள்ளிப்பட்டு, மங்கலம்பேட்டை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தங்கர்பச்சான் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது பேசிய அவர், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தான் வெற்றி பெற்றால் விவசாயிகளின் கோரிக்கையை பூர்த்தி செய்வேன் என பேசினார். மேலும், பிரசாரத்தின்போது மூதாட்டி ஒருவருக்கு தங்கர்பச்சான் சால்வை அணிவித்தார். அப்போது அந்த மூதாட்டி நெகிழ்ந்துபோனார்.....


Next Story

மேலும் செய்திகள்