"பாஜகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஒரு பத்திரம்" - தமிழிசை செளந்தரராஜன்

x

பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கானது என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் வி.கே. சிங், ஆகியோர் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். அப்போது, பெண்கள் தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, பிரதமர் மோடி இந்தியாவுக்காக தயாரித்த தேர்தல் அறிக்கையில், தமிழுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், அதன்மூலம் அவர் உள்ளத்தில் தமிழ் இணைந்திருப்பதை உணர முடியும் என தெரிவித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விட பாஜக தேர்தல் அறிக்கை சிறந்தது என குறிப்பிட்ட அவர், 15 லட்சம் மக்களிடம் ஆலோசனை பெற்று தயாரிக்கப்பட்ட இது, மக்களக்கான தேர்தல் அறிக்கை என்றும் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்