"நான் வென்றால் நீங்களும் எம்.பி.தான்... தைரியமா சொல்லுங்க.." - பிரசாரத்தில் நெகிழ வைத்த தமிழிசை

x

தான் வென்றால் தொகுதி மக்கள் ஒவ்வொருவரும் எம்.பிதான் என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். பெருங்குடி கல்லுக் குட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசைக்கு, மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரசாரத்தின் போது பேசிய அவர், 2016ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்த போது, படகு எடுத்துக்கொண்டு கர்ப்பிணியை காப்பாற்றியதை நினைவுகூர்ந்தார். போன் செய்தால் பேசுவார், பிரச்சனை என்றால் வருவார் என்று தொகுதி மக்கள் தைரியமாக சொல்லும் அளவிற்கு செயல்படுவேன் என தமிழிசை வாக்குறுதி அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்