"வென்றால் 3 ஆண்டுகளில் தீர்வு.. இல்லைனா உடனே ராஜினாமா" - அசரவிட்ட பாஜக வேட்பாளர்

x

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான வசந்த ராஜன், தான் வெற்றி பெற்று வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லை என்றால் 4 ஆண்டுகளில் எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என உறுதியளித்துள்ளார்... பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில் மேடை அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தங்களுக்குப் பிரதான பிரச்சினையாக இருப்பது வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தான் என்று கவலை தெரிவித்தனர்... இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் நிச்சயம் அதற்குத் தீர்வு எட்டப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்