Venezuela | Maduro | முதன்முறையாக மனம் திறந்த மதுரோ | வெனிசுலா ஆதரவாளர்களுக்கு சொன்ன மெசேஜ்

Venezuela | Maduro | முதன்முறையாக மனம் திறந்த மதுரோ | வெனிசுலா ஆதரவாளர்களுக்கு சொன்ன மெசேஜ்

ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த வெனிசுலா முன்னாள் அதிபர் மதுரோ அமெரிக்காவில் சிறையில் உள்ள வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, சிறைக்கு சென்றபின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்... தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் தானும் தன் மனைவியும் நலமாகவும் உறுதியுடனும் இருப்பதாக தெரிவித்தார்... ஜனவரி 3-ம் தேதி அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் தற்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அவரது ஆதரவாளர்கள் வெனிசுலா மற்றும் வெளிநாடுகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னை போர்க்கைதி எனக் கூறி, தான் இன்னும் சட்டப்படி அதிபர் என்ற நிலைப்பாட்டை மதுரோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com