அமெரிக்கா ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல்- 6 குழந்தைகள் பலியான சோகம்

காபூலில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 குழந்தைகள் பலியானதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல்- 6 குழந்தைகள் பலியான சோகம்
Published on

ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்தை தற்கொலை படையினர் நெருங்கியதால், அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ஏவுகணை குடியிருப்பு பகுதியில் விழுந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு வயது உட்பட 6 குழந்தைகள் உடல் சிதறி பலியானதாக உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து கொண்ட அமெரிக்கா, ஏவுகணை செலுத்தப்பட்ட இடத்தில் ஆப்கன் மக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com