

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்கு இது பதிலடி என கூறப்படுகிறது. விரைவில் இஸ்ரேல் சென்று புதிய பிரதமரை சந்திக்க உள்ள ஜோ பைடன், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.