

* தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துதல், இறுதிப் போரில் கைதானோர், காணாமல் ஆக்கப்பட்டோரை உடனடியாக, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்தல்.
* சிங்களர் பிடியில் உள்ள தமிழர்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை முறையாக திருப்பி அளித்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இன அழிப்பு குற்றத்துக்காக லைபீரிய அதிபர் சார்லஸ் டெயிலர், செர்பிய குடியரசு தலைவர் மிலோசேவிக், சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் மீதான விசாரணை போல், ராஜபக்ச மீதும் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.