தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி, டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்லியில் அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

* இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

* அப்போது, 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ராணுவ உபகரணங்கள் வழங்குவது குறித்த ஒப்பந்தங்களுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

* பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து தங்கள் குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா, அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

* அதிபராக பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி 60 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறினார்.

* இதன் பின் பேசிய பிரதமர் மோடி, சைபர் கிரைம், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், குறித்து விவாதித்ததாக கூறினார்.

* தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறை குறித்து விவாதித்தோம் என்றும் இருவரும் ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

* பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்க, இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com