அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள டெலவர் நகரில் பயணிகள் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியது... ரயிலின் முதல் பெட்டி குபுகுபுவென தீப்பற்றி எரியத் துவங்கி அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ரயிலில் இருந்த 350 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.