ஈரானில் ஆளுநர் ஒருவர் விழா மேடையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு அசார்பிஜான் மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அபெடின் கோரமின் பதவியேற்பு விழா மேடையில் இச்சம்பவம் நடந்தேறியது. மேடையில் ஏறிய ஆயுப் அலிசதே என்ற நபர் திடீரென்று கொராமை பளார் என்று அறைந்தார். ஆயுப் தாகியதற்கான தெளிவான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் கடும் கோபத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.