Landslide | திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த 10 உயிர்கள்
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி
கொலம்பியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். பெலோ ஆன்டியோகியா
BELLO ANTIOQUIA மலைப்பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Next Story
