ஸ்லோவேனியாவில் 17 மீட்டர் உயரமுள்ள பாலத்தில் இருந்து துணிச்சலாக குதித்து டைவ் அடித்து வீரர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். சோகா நதியின் மீது அமைந்துள்ள இந்தப் பாலத்தில் நடைபெற்ற போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், அருகே உள்ள பாறைகளில் சுற்றி அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மலர்களை தூவி அவர்களை உற்சாகமூட்டினர்.