Srilanka | "மாத்திர வாங்க கூட 10 ரூபா காசு கிடையாது.. என் புள்ளைய ஒப்படைச்சிடுங்க.." - கதறும் தாய்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையால் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் அவர்களது சொந்த ஊரான வானகிரி கிராமமக்கள் சோகத்தில் உறைந்துள்ளனர்.படகு பழுதானதால் திசைமாறி சென்றதாக வேதனை தெரிவித்த அவர்கள், 14 மீனவர்களையும் ஒரு கோடி மதிப்பிலான விசை படகையும் மீட்டுத்தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
