

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, கடும் பாதுகாப்புக்கிடையே திறக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலுக்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என அனைவரது பைகளை போலீசார் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தினர். ராணுவத்தினர், பாதுகாப்பு படை, உள்ளூர் போலீசார் என பலரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பள்ளி அறைகளும், வளாகப் பகுதிகளும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மோப்ப நாய்களும் இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.