

இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைக்கப் போவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கும் நிலவரங்களை பார்க்கும் போது மிகப்பெரிய கூட்டணி ஒன்றுக்கான அவசியம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கண்டு பலம்வாய்ந்த அரசாங்கத்தை நிறுவுவதே தமது லட்சியம் என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.