பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் களுத்துறை அடுத்த ஒரனை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கோத்தபய ராஜபக்ச தற்போதைய அரசு தேசிய பாதுகாப்புக்கு எதையும் செய்யவில்லை என்றும் அதனாலேயே தேவாலயங்களில் குண்டு வெடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.