RussiaAttack| ரஷ்யா அட்டாக்கில் உயிரிழந்த 4 இந்திய மாலுமிகள் | தூதரை நேரில் அழைத்து கண்டித்த இந்தியா
RussiaAttack| ரஷ்யா அட்டாக்கில் உயிரிழந்த 4 இந்திய மாலுமிகள் | தூதரை நேரில் அழைத்து கண்டித்த இந்தியா
Russia Attack | ரஷ்யா அட்டாக்கில் உயிரிழந்த 4 இந்திய மாலுமிகள் | ரஷ்ய தூதரை நேரில் அழைத்து கண்டித்த இந்தியா 4 மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் - ரஷ்ய தூதரை அழைத்து இந்தியா கண்டனம் உக்ரைனில் வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்தில், இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள ரஷ்யத் தற்காலிகத் தூதருக்குச் சம்மன் அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், நேரில் ஆஜரான தூதரிடம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்களும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கண்டித்துள்ள இந்தியா, கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
