செர்பியாவில் அதிபருக்கு எதிராக கொட்டும் மழையில் போராட்டம்

செர்பியாவில் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vucic) அரசுக்கு எதிராக, தலைநகர் பெல்கிரேடில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழை, பலத்த காற்று, அரசின் ஒலி பெருக்கி சத்தம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்நாட்டில் அதிபருக்கு எதிராக ஓராண்டு காலமாக போராட்டம் நடைபெற்று வருவதன் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com