

2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது குரேஷி, தலைநகர் கொழும்பில், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். அப்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவும் உடன் இருந்தார். இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுப்படும் என கோட்டபயா ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.