Nigeria Mosque Blast | தொழுகையின் போது குண்டு வெடிப்பு - நைஜீரியாவில் 7 பேர் பலி

x

மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு - 7 பேர் பலி

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைடுகுரியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மைடுகுரிவில் நீண்டகாலமாக போகோ ஹராம் பயங்கரவாத குழு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்